புதுக்கோட்டையின் கலை பண்பாட்டுக் கூறுகள் - பேரா. சுவாமிநாதன்



தமிழ் இணையக் கல்விக் கழகம்
சென்னை- 600 025.

வழங்கும்

இணையம் வழி
தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்
பற்றிய

தொடர் சொற்பொழிவு-2

'புதுக்கோட்டையின் கலை பண்பாட்டுக் கூறுகள்'
என்னும் தலைப்பில்

பேரா. சு. சுவாமிநாதன்
அவர்கள் உரையாற்றுகிறார்.

            நாள்   :           13.06.2014, வெள்ளிக்கிழமை
            நேரம்            :           மாலை 4.00 மணி
            இடம் :           தமிழ் இணையக் கல்விக்கழகம்,
                                    (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்)
                                    காந்தி மண்டபம் சாலை,
                                    கோட்டூர், சென்னை-25.
                                    தொ.பே: 22201012

அனைவரும் வருக!

முனைவர் .அர.நக்கீரன்
இயக்குநர்
தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றைத் திரட்டி, தொகுத்து இணையத்தில் ஏற்றும் தமிழ் இணையக் கல்விக் கழக முயற்சியின் ஒரு பகுதியாக இச்சொற்பொழிவைத் திங்கள்தோறும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டையின் பாரம்பரியம்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு, அதற்கே உரிய சில தனிச் சிறப்புகள் உண்டு. இந்திய விடுதலையின் போது மன்னர் ஆட்சியின்கீழ் இருந்த புதுக்கோட்டைக்கு சங்க காலம் முதல் ஒரு வரலாறும் உண்டு.

இது கடந்த கால சமணத்தின் தடங்களைக் கொண்டுள்ளது. புதுக்கோட்டையை கோயில் கட்டடக் கலையின் அருங்காட்சியகம் என்று அழைக்கலாம். ஏனென்றால் இம்மாவட்டத்துக்கு குகைக் கோயில்கள் முதல் நவீன கோயில்கள் வரையான நீண்ட பாரம்பரியம் உள்ளது. திருமயத்தில் உள்ள இரட்டைக் குகைக் கோயில்கள், நார்த்தாமலையில் உள்ள விஜயாலாய சோழீசுவரம், கொடும்பாளூரில் உள்ள மூவர் கோயில், சித்தன்னவாசலில் உள்ள சமணர் குகை ஓவியங்கள் ஆகியவை உலகப் புகழ் பெற்றவை. புதுக்கோட்டைக் கோயில்களில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைந்த சிற்பங்கள், அம்மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கின்றன.

ஏறக்குறைய 400 ஆண்டுகளாக இம்மாவட்டம் தொண்டைமான் அரசர்களின் ஆளுமையின்கீழ் இருந்தது. இசை, நாட்டியம், இலக்கியம், பண்பாடு ஆகியவற்றிற்கு அவர்கள் அளித்த ஆதரவின் காரணமாக, தமிழகத்தின் பாரம்பரியத்திற்கான அடிச்சுவடுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் காணலாம். 

பேரா. சு. சுவாமிநாதன் - ஓர் அறிமுகம்

புதுக்கோட்டையைச் சேர்ந்தவரான சுவாமிநாதன், கலை, கலாசார ஆர்வலர். நம் மக்கள் அவர்களுடைய பாரம்பரியத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்னும் கருத்து உடையவர். இயந்திரப் பொறியாளரான இவர், தில்லி ஐஐடியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியராக இருந்திருக்கிறார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர், தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி, அதன்மூலம் நம் கலாசாரத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அஜந்தா  ஓவியங்கள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். பல்லவர்களின் மாமல்லபுரம் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகம் எழுதியுள்ளார். இவருடைய மின்னஞ்சல் முகவரி sswami99@gmail.com