என் குறள் - இசைக்கவி ரமணன்

தமிழ்ப் பாரம்பரியம்
(Tamil Heritage Trust)
presents
என் குறள்
(My Couplets)

by 

 இசைக்கவி ரமணன் 
(Isaikkavi Ramanan)

at 5.30pm on Saturday, August 2nd, 2014
at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.
About the topic:
  • எத்தனையோ கவிதைகள், பாடல்களுக்கு இடையே, இடைவிடாத பயணங்களுக்கு நடுவே, கடுமையான அலுவலகச் சுமைகளுக்கு ஊடே, கொடுமையான வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கும் மத்தியில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குறள் வெண்பாக்கள் என்னிடம் பிறந்தன.
  • இவை திருக்குறள் போலவே குறள் வெண்பா இலக்கணத்தில் அமைந்துள்ளன. ஒற்றுமை அத்தோடு முடிகிறது! வள்ளுவரின் ஞானத்திற்கு நானெங்கு போவேன்?
  • வாழ்வியல், சமூகம், யோகம் போன்றவை சார்ந்த இந்தக் குறட்பாக்களை நான் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. நிறையத் திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. 
  • இந்த நிகழ்ச்சி என்னை அந்தப் பணியில் தூண்டும் என்று நினைக்கிறேன். இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவேண்டும் என்னும் எண்ணமும் இருக்கிறது.
About the Speaker:
  • பிறந்தது நெல்லையில் 30.03.1954/வளர்ந்தது சென்னையில்/ வணிகவியல் பட்டதாரி
  • தந்தை அமரர் திரு. த.வெ. அனந்தராமசேஷன் வடமொழியில் ஆசுகவி, ஆங்கில/பொருளாதார விற்பன்னர்/ தி ஹிண்டு நாளிதழில் உதவி ஆசிரியராக 23 ஆண்டுகள் பணிபுரிந்தார்
  • நான் தி ஹிண்டு நாளிதழில் 27 ஆண்டுகள் பணிபுரிந்து, விசாகப்பட்டினத்தில் வட்டார மேலாளராக (Regional Manager) பணிபுரியும் போது, ஓய்வுக்குப் 10 ஆண்டுகள்  முன்பே ஊழியத்திலிருந்து விலகிக்கொண்டேன்
  • என்னுடைய ஒரே அடையாளம் நான் தமிழ்க்கவிஞன் என்பதே. பாடல்கள் புனைந்து பாடுவதும் உண்டு.கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, சுய முன்னேற்றம் என, சில நூல்களும், குறுந்தகடுகளும் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் இரண்டு நூல்கள்
  • யாத்ரி. 30 முறை இமயப் பயணம். புகைப்படக் கலையில் ஆர்வம்
  • தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்து வருகிறேன்

RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494

Sittannavasal Monuments and Preservation of its Paintings, Prof. Swaminathan (Video)

Prof. Swaminathan on Sittannavasal Monuments and Preservation of its Paintings.


தமிழகக் கல்வெட்டுகள் - ஓர் அறிமுகம் - மார்க்சிய காந்தி

இணையம் வழி
தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்
பற்றிய
தொடர் சொற்பொழிவு-3

'தமிழகக் கல்வெட்டுகள் - ஓர் அறிமுகம்'

என்னும் தலைப்பில்

திருமதி மார்க்சிய காந்தி
துணை கண்காணிப்பு தொல்லியளாளர் (பணி நிறைவு)
அவர்கள் உரையாற்றுகிறார்.

நாள் : 11.07.2014, வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 4.30 மணி
இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம்,
(அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்)
காந்தி மண்டபம் சாலை,
கோட்டூர், சென்னை-25.
தொ.பே: 22201012

அனைவரும் வருக!
முனைவர் ப.அர.நக்கீரன்
இயக்குநர்

சிலப்பதிகாரச் சிக்கல்கள் - இந்திரா பார்த்தசாரதி

தமிழ்ப் பாரம்பரியம்
(Tamil Heritage Trust)
presents
சிலப்பதிகாரச் சிக்கல்கள்

by 
இந்திரா பார்த்தசாரதி

at 5.30pm on Saturday, July 5th, 2014
at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.

About the topic:
சிலப்பதிகாரம் எப்போது இயற்றப்பட்டது? சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ, சேரன் செங்குட்டுவனின் தம்பியா? இளங்கோ ஒரு சமணத் துறவியா? வஞ்சிக்காண்டம் சிலப்பதிகாரத்தில் பிற்சேர்க்கையா? சிலப்பதிகாரத்தின் வேறு எந்தப் பகுதிகளைப் பிற்சேர்க்கை என்று கருதலாம்? இளங்கோவும் மணிமேகலையை எழுதிய சாத்தனாரும் சமகாலத்தவர்களா?

சிலப்பதிகாரத்தில் காணப்படும் நாடக, நடன இலக்கணச் செய்திகளுக்கும் பரத முனியின் நாட்டிய சாஸ்திரத்தில் வரும் செய்திகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஆனால் அதே நேரம் சிலப்பதிகாரத்தில் உள்ள பல இசை, நடன, நாடகச் சொற்களுக்கான விளக்கத்தை வடமொழி நூல்களில் உள்ள சொற்கள்மூலம் அறிந்துகொள்ள முடியவில்லை என்று உ.வே.சா சொல்கிறார். பரத முனியே தமிழகத்தைச் சேர்ந்தவரா? தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் அவர் நூல்களை எழுதி, தமிழில் அவர் எழுதிய நூல் கிடைக்காமல் போய்விட்டதா?

இதுபோன்ற பல கேள்விகளை எழுப்பும் இந்திரா பார்த்தசாரதி, அவற்றுக்கான விடைகளைத் தேடுகிறார். சிலப்பதிகாரமே இந்திய மொழிகளின் முதல் கலை, இலக்கியக் களஞ்சியம் என்கிறார் இந்திரா பார்த்தசாரதி.

About the Speaker:
இந்திரா பார்த்தசாரதி, தமிழின் முதன்மைப் படைப்பாளி. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று எழுதினாலும், நாடக ஆசிரியராகவே அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். குருதிப்புனல் நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். பாரதிய பாஷா பரிஷத் விருது, சரஸ்வதி சம்மான் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது பெற்றவர். இந்திரா பார்த்தசாரதி, தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நிகழ்கலைத்துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றபின் தற்போது சென்னையில் வசித்துவருகிறார்.

RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494